Monday 28 September 2015

ஏக்கத்தில்


நின்னை தொலைவிருத்தி நெஞ்சம் வலியெழுப்ப
நின்றேன் நிமிடம் நகராதோ
பொன்னை மணந்து ஒருபோதும்கலக்கமின்றிப்
போகும் வாழ்வு திரும்பாதோ
இன்னல் பலகொடுத்தேன்  என்னை கரம்பிடித்தாய்
உந்தன் மகிழ்வு பெரிதாக
எனனே செயல் புரிவேன் இந்தோர் உலகமதில்
ஏக்கம் என முடிவும் தகுமோ

செந்தேன் நிலவெழுந்து செல்லும் வானமதில்
சென்றே உனையடைவதென்றோ
தந்தேன் என அருகில் தழுவும் நிலையடைய
தாகமெடுப்ப தெந்தன் தவறோ
பொன்தேர் தனிலிருந்து போகும் வழியில் எழில்,
பொய்கை மலர் நிறைந்த சுனையில்
வந்தே யிருந்து மலர் வாசம்தனை நுகர்ந்து 
வாழ்வைக் கழிக்க வருவாயோ

மந்தம் எழும் மனதில் மாயக் கனவுகளில்
மாற்றம் இனியும் வருமாமோ
சொந்தம் என உனையும் தொட்டே மகிழ்வுகொள்ள
சொல்லும் நாளுமென்று வருமோ
சந்தமிசைக்க கவி  சொல்லும் மனதில் உந்தன்
சிந்தை மலர்ந்து விடுமாமோ
நந்திஎன  விதியும் நடுவில் பிரித்த நிலை
நல்லோர் முடிவைத் தருமாமோ

வந்தே எனதருகில் வாடும் மனதில் சுகம் 
தந்தேன்என்றே மலருவாயோ
விந்தை எனதுவிரல் வீழும் கண்ணீர்துடைத்து 
விம்மல்தனை நிறுத்துமாமோ
பந்தே என எறியும் பல்நேர் விளைமொழியும்  
பதைக்கும் நிலை தருவதுண்டோ 
நொந்தேன் மனம்வலித்து நெஞ்சம் அழுகைவிட்டு
நிகழும் வாழ்வும் திரும்பாதோ
 

Saturday 26 September 2015

நிதம் சக்தி


ஏனிதோ எண்ணம் மனதிருத்தி -அதை
ஏதோ பொருள கொண்டு தான் வருத்தி
தேனிதழாய்மென் மனம் உறுத்தி - அது
தேம்பியழும் விதமாய்ப் படுத்தி
நானில மீதினில் நானுழன்றும் - நதி
நாடும் கடலென்றுனைக் கலந்தும்
வானிலெழுந்த என் தெய்வ சக்தி -நீயும்
வைத்த பாதை ஏனோ முள்நிறுத்தி

மானில் மருள் குணம் கண்ணில் வைத்தாய் - அந்தி
மாலையில் செங்கதிர் தாளவைத்தாய்
தேனில் நிறைபூக்கள் சத்தமின்றி அதன்
தேகம் மலர்ந்து கொண்டாட வைத்தாய்
வானில் ஒளிர்ந்திடும் வட்டக் கதிர் ஒரு
வீசும் பந்தாய் எழும் வீழுவதுவும்
தானியங்கும் வண்ணம் பூமியினை நிதம்
தன்னைச் சுற்றிச் சுழன்றோடச் செய்தும்

ஆகியதாய் அண்டம்மேவியெழும் எங்கள்
ஆதிசக்தி தனை எண்ணியென்றும்
காகிதப்பூப் படைத்தன்பு கொண்டேன் பலர்
காணக் கவிபபூக்கள் மாலைசெய்தேன்
ஆகிட நீ அதனூடே அசைந்தொரு
அற்புதமான ஒளி கொடுத்தாய்
வேகிட என்னுயிர் வாடும் நிலைதன்னை
வேடிக்கை யாகவோ காட்டிநின்றாய்

வாக்கினில் கொள் விதமாக்கி வைத்து அதை
வாழைக்கனி போலினிக்க வைத்து
போக்கினில் மாற்றக்கள் ஊக்குவித்து அதை
போக்கிப் புதிதென தோற்றுவித்து
ஏக்கக்த்திலெம்மையும் ஆழ்த்தி விட்டு அதை
எண்ணக் கைகொண்டெம்மையும் கிள்ளிவிட்டு
கூக்குரலிட் டழுகையிலே ஏனோ
கொட்டும் கண்ணீர்த் துளி பாராநின்றாய்

வலிக்கு தடீ


***************************************
நெருஞ்சி முள்ளும் வலிக்க வில்லை தங்கமே தங்கம் - உனை
நினைந்து மனம் கொதிக்கையிலே தங்கமே தங்கம்
வருஞ் செயல்கள் பலிக்கவில்லை தங்கமே தங்கம்- உள்ளம்
வருந்தி யுடல் துடிக்குதடி தங்கமே தங்கம்
பெருஞ்சினமே பொங்குதடி எதனிலும் எங்கும் - இதன்
பெயரெதுவோ மனம் கசந்தேன் இருளடி எங்கும்
விரும்பி யுள்ளம் துடிக்குதடி விளைவயல் நெல்லும் -எனும்
விதம் வளரும் மன எண்ணமோ வெறுமையில் காணும்

அரும்பும் மலர் சிறுமுகைபோல் அவிழ்ந்திடும் அன்பும்- அதில்
அழகுடனே சிரிக்கும்முகம் அதனையும் எண்ணும்
குரும்பைகட்டி தேரிழுத்து கொண்டது அன்றே -இன்று
குழைந்தஎழில் சிதையுமுன்னே கலைந்ததேன் இன்னும் ‘
தெருவில் மனம் அலையுதடி திரும்பிடநீயும்- என்னை
தொடும்விரல்கள் தொலைந்ததென்ன விழிமூடி நானும்
தரும்வகையில் உனதுஅன்பு தவறிட காணும் -இங்கே
திரும்பி நின்றே தனியுலகம் ரசிக்கவோ நாளும்

வரம்புகட்டி வாழ்ந்தவகை மனமெண்ணி நானும் அந்த
வளர்மதியின் முழுமை கொள்ள வாழ்த்துவ துள்ளம்
பிரமை கொள்ளும் பொழுது கொண்டேன் பேரிடியொன்றே என்னைப்
புறம் விழுத்தி அழவிட என் பெருமை கொண்டாயோ
நிரம்பி உள்ளம் நிம்மதியில் நேர்ந்திடும் வாழ்வில் - எனை
நிர்க்கதியாய் விடுவதிலே நிலைப்பதும் ஏனோ
கரம்பிடித்தால் கைவிடலாம் காரணம் கொண்டால் - அது
கடைசியென ஆகும்வரை காத்திரு கண்ணே

நீரா நெருப்பா`


பூமுடித்தாள் பொட்டுவைத்தாள்
. பூவிதழின் வாச மிட்டாள்
வாகுடிக்கத் தேன் எனவே
. வந்தவண்டைச் சுட்டெரித்தாள்
யார்முடிகொள் காவலனோ
. யௌவனத்தில் கால் பிடிக்கும்
தேர்முடிக்கு ஒப்பஎழில்
. தேகமதில் வார்த்தெடுத்தாள்

பார்வியந்து போற்றுமவள்
. பார்வை யதன் சாயல் பட்டால்
எர்பிடித் துழுவதெலாம்
. எங்கிருந்து கற்றுவந்தாள்
வார் பிடித்து வானஎழில்
. வண்ணமதி மேனிகொண்டாள்
ஊர் பிடித்துத் தூற்றமுதல்
. ஓர்வழியைக் காணுமென்றாள்

கார் விரிந்த கூந்தல்தனைக்
. கோதி யகில் வாசமிட்டா:ள்
மார்பி லெனைத் தாங்கியவள்
. மையல் தந்து போதையிட்டாள்
கீர் எனவெ தேகம் சுற்ற
. கேட்டகாமல் ஆடவைத்தாள்
நேர் பார்த்துவா அழைத்தேன்
. நெஞ்சுக்குட் புகுந்துவிட்டாள்

தூர் எடுத்த மண்ணெனவே
தேகம்குளிர் தோற்றம் கொண்டாள்
தீர் பிடிக்கும் துன்பமென்றால்
. தென்றலென ஆகி வந்தாள்
பூர்வீக புண்ணியமோ பேதை
. எந்தன் மாலை கொண்டாள்
நீரூறும் கண்களினி
. நிச்சயம் காண் ஆனந்தமே

பாசக் குருவிகள்!


*****************
நேசங் கொண்ட குருவிகளே
. நீளப் பறக்கும் வானத்தில்
தேசங்கொண்ட நிலையென்ன
. திரும்ப வந்தால் கூறுங்கள்
வாசங் கொண்டு மலரங்கே
. வண்ண இதழ்கள் விரிப்பதிலை
பேசுங்கிளியும் கிள்ளை மொழி
. பேசா திருக்கு தென்றார்கள்

வீசும் தென்றல் விளையாடா
. வேப்ப மரத்துக் குயில் பாடா
நாசம் எல்லை மீறியதாய்
. நாட்டில் மக்கள் வாழுகிறார்
கூசுங் கொலைகள் களவோடு
. குமரி மேனி கலைத்தாடும்
நீசம் எல்லை காணுவதால்
. நிலவேநீயும் வருவதுண்டோ

மாசும் கொண்டோர் மனமெல்லாம்
. மருகிப் பிறழ்வாய் மனத்தாகம்
பூசும்முகங் கொள் வேடங்கள்
. புரிவோர் மலியப் பொருளுண்டோ
காசுக் கடிமைக் கயவர் கைக்
. காணும் பொம்மை போற்சிலரும்
நேசம் கொள்ளும்மன மின்றி
. நிற்கும் இடமும் மாறியதென்

தேசங்கெட்டே காமுகர்கள்
. திக்கில் எங்கும் திகழுங்கால்
மாசற்றோர் தன் மேனிதனை
. மறைத்தே கரியை முகம்பூசி
வேசம் மாற்றி வெறியோடு
. விலங்காய் திரியும் கயவர் கை
நாசம் தவிர நடைபோடும்
. நம்மூர்ப் பெண்கள் காண்பாயோ

பூசி மஞ்சள் நீராடும்
. பெண்ணின் வதனம் பங்கயம்தன்
பாசிக் குளத்தில் காணும் போல்
. பரந்த கூந்தல் அலையாட
நேசிக்கும் தன் பதியெண்ணி
. நீரின் தழுவல் நாணித்தான்
கூசிச்சிவந்த கன்னத்தில்
. கொய்யா தெடும் கிளி மூக்கு

வாசப் பூவின் மிருதுவினை
. வளைத்தே எடுத்த வாய்மொழியின்
பாசப் பொழிவில் பைங்கிளியின்
. பழமைத் தமிழைப் பயமின்றி
தேசம் மீட்ட திருமகனும்
. திங்களொளியில் கைகோர்த்து
பேசும் போது அச்சமின்றிப்
. பக்கம் இருத்தல் எக்காலம் ?

**************************

Friday 25 September 2015

வாழப் பழகுவோம்

                                      'வாழப் பழகுவோம்

அறிவோடு விளையாடி வெல்லும் வாழ்க்கை 
.  அறமென்ற நிலை கொள்ள வேண்டும்
குறியோடு நம் வாழ்க்கை கொண்டே - நல்ல
.  குணவானாம் இவனென்றே எவர்கூற வேண்டும்
வறியோரை யாம் காக்க வேண்டும் - இன்னும் 
.  வசதியென் றுள்ளோர்கள் தனமீய வேண்டும்
பிறிதென்ற மனமின்றி என்றும் - வாழ்வில்
.  பிறர்மீது அன்போடு மொழிகூற வேண்டும்

களிகொண்டு முகங் காணவேண்டும் - எதைக் 
.  கருதாது துயரின்பம் சமமாக வேண்டும்
வெளிவானின் பிரகாசம் வந்தே - உந்தன் 
.  விழிமீது ஒளியூட்டும் விதம்வாழ வேண்டும்
எளியோரின் சொல் கேட்க வேண்டும் - அன்பை 
.  இறைஞ்சும் நல்வாழ்வுக்கு இறைவேண்டு நாளும்
புளியோடும் அதனோடு போலே - உந்தன் 
.  புறவாழ்வு இருந்தாலும் மனமொன்ற வேண்டும்

அழகான மனை எண்ணவேண்டும் - என்றும் 
.  அவளோடு மனம்விட்டு எது தானும் பேசும்
வழமைகொண் டறிவோடு சிந்தை - தன்னில்
.  வருங்கால நிலையெண்ணி வளம் கொள்ள வேண்டும்
உழவென்று வயலோடி நின்றே - கதிர் 
. எழுந்தாடும் நிலைகாண மகிழ்வானே அவனை
விழுகின்ற நதிபோலவன்றி  அந்த 
.  வெளிவானைத் தொடுகின்ற மலையாக்க வேண்டும்

அளவான குழந்தைகள் எங்கள் - அன்பின்
.  அறம்கொள் இல் லறவாழ்வை இலகாக்கும் எண்ணி
களவோடு பொய்ப் பேச்சுமின்றிக் - கேடு 
.  கயமைகொள் இருள் நீங்கிக் காணுள்ளம் வேண்டும்
தளம்பாத உயரெண்ணம், தாங்கி - நிதம் 
.  தனை நம்பும் மனைகூடி ஒருபாதை கண்டே
இளமை என்றின்பத்தில் வாழ்வை - என்றும்
  .எழுகின்ற கதிர்காக்கும் ஒளிதன்னை வேண்டு!'



அறிவோடு விளையாடி வெல்லும் - வாழ்வில்
. அறமென்ற நிலை கொள்ள வேண்டும்
குறியோடு நம் வாழ்க்கை கொண்டே - நல்ல
. குணவானாம் இவனென்றே எவர்கூற வேண்டும்
வறியோரை யாம் காக்க வேண்டும் - இன்னும்
. வசதியென் றுள்ளோர்கள் தனமீய வேண்டும்
பிறிதென்ற மனமின்றி என்றும் - வாழ்வில்
. பிறர்மீது அன்போடு மொழிகூற வேண்டும்

களிகொண்டு முகங் காணவேண்டும் - எதைக்
. கருதாது துயரின்பம் சமமாக வேண்டும்
வெளிவானின் பிரகாசம் வந்தே - உந்தன்
. விழிமீது ஒளியூட்டும் விதம்வாழ வேண்டும்
எளியோரின் சொல் கேட்க வேண்டும் - அன்பை
. இறைஞ்சும் நல்வாழ்வுக்கு இறைவேண்டு நாளும்
புளியோடும் அதனோடு போலே - உந்தன்
. புறவாழ்வு இருந்தாலும் மனமொன்ற வேண்டும்

அழகான மனை எண்ணவேண்டும் - என்றும்
. அவளோடு மனம்விட்டு எது தானும் பேசும்
வழமைகொண் டறிவோடு சிந்தை - தன்னில்
. வருங்கால நிலையெண்ணி வளம் கொள்ள வேண்டும்
உழவென்று வயலோடி நின்றே - கதிர்
. எழுந்தாடும் நிலைகாண மகிழ்வானே அவனை
விழுகின்ற நதிபோலவன்றி அந்த
. வெளிவானைத் தொடுகின்ற மலையாக்க வேண்டும்

அளவான குழந்தைகள் எங்கள் - அன்பின்
. அறம்கொள் இல் லறவாழ்வை இலகாக்கும் எண்ணி
களவோடு பொய்ப் பேச்சுமின்றிக் - கேடு
. கயமைகொள் இருள் நீங்கிக் காணுள்ளம் வேண்டும்
தளம்பாத உயரெண்ணம், தாங்கி - நிதம்
. தனை நம்பும் மனைகூடி ஒருபாதை கண்டே
இளமை என்றின்பத்தில் வாழ்வை - காண
.எழுகின்ற கதிர்காக்கும் ஒளிதன்னை வேண்டு!

'எண்ணங்களே வாழ்க்கை

எண்ணங்களே நம்வாழ்க்கை - அட
. இதிலெது ரகசியமில்லை
எண்ணங்கள் கற்பனையாகும் - ஆம்
. இதிலொரு புதுமையுமில்லை
எண்ணங்கள் மழை நீர்க்குமிழி - அதன்
. எதுவரை நிலைகொளக் காணும்
மண்ணிடை விழித்திடக் கனவும் - விழி
. மூடிடக் கற்பனை முடியும்

தண்ணொளி வீசிடும் நிலவு - இத்
. தாரகை பொறித்த ஆகாயம்
விண்ணெழில் கீழ்த்திசைப் பரிதி - இருள்
. விடிந்ததும் பூக்கின்ற மலர்கள்
கண்ணெழிற் கற்பனை வாழ்வு - அது
. கசந்திடப் போம்சுடுகாடு
வண்ணக் குழைமொழி வனிதை - இவை
. வாழ்வினில் கற்பனை விம்பம்

எண்ணங்கள் பெருகிடுமிரவு - எமை
. ஏற்றி மயக்கிடும் இமயம்
வெண்பனி மறை மலை தோற்றம் அதில்
விழுந்திடும் கதிர் வரை வெண்மை
வண்ண மெழும் வான் ஒளித்தீ - அது
. வந்து கொளுத்திடும் பூந்திரி
உண்ண உருப்படும் மேனி - அதில்
. உணர்வெரி தணிவெனும் இன்பம்

எண்ணங்கள் விண்வழி பிறவி - அவை
. இருந்தெமை இயக்கிடும்கருவி
அண்ணளவில் பகல் இரவு - இவை
. அமைப்பது ஊறவெனும் புணர்வு
மண்ணிடை எதிர் மறை கவர்ச்சி - இவை
. மனதினில் சுகமெழ விரவி
கண்ணதில் மயங்கிட உருகி - மனக்
. காட்சியின் சூனிய வாழ்வாம்

'வந்த பாதையில் கற்ற பாடங்கள் .

(சந்தவசந்தக் கவியரங்குக்காக எழுதியது)
.
.
பாடுங் குயிலும் பேசும்கிளியும்
.  பாடம் கற்றதில்லை
ஆடும் மயிலும் நடனம் எங்கும்
.  அறிந்தே உற்றதில்லை
கூடும் அலைகள் விரிந்தே ஓடும்
.  கொண்டோர் செல்வரிசை
ஏடும் தூக்கும் இயல்பாய் குருவின்
. இடத்தில் கற்றதில்லை

சூடும் பூவை தென்றல்தொட்டே
.  சிறக்கும் கற்றதில்லை
ஒடும் காற்றின் உரசும் நளினம்
.  உலகிற் படித்ததில்லை
மாடும் கன்றை அம்மாஎன்கும்
.  மனதில் பண்புதனை
தேடும் கல்விஎன்றே கற்றுத்
.  தேர்வும் எழுதவில்லை

பாடும் பட்டலை மாந்தர் அறிவெழப்
.  பள்ளி சென்றிடினும்                  
நாடும் குருவுடை  நல்லோர் சிந்தனை
.  நலனைத் தந்திடினும்
காடும் மலையும் கொண்டோர் பூமி
.  கொள்கையில் வாழுபவர்
ஊடும் இதனில் உள்ளோர் அனுபவம்
.  உண்மைப் பாடங்களாம்

நாடும் மனமும் நலிந்ததே போம்பின்
.  நாமதில் கற்கின்றோம்
கூடுமுறவுகள் கொள்கை பிரித்தார்
.  குற்றம் கற்கின்றோம்
சாடும் பொழுதினில் பொய்களில் ஊறிச்
. சற்றே மதி கொண்டோம்
வாடும் மனதில் சுதந்திரம் அற்றோர்
.  வறுமை கற்கின்றோம்

ஒற்றுமையின்றி ஒரினமேன்மை
.  எழுவதில்லை படித்தோம்
கற்றவர் கூடி கனவுகள் கண்டோம்
.  காரியம் செயல் மறந்தோம்
சொற்களைப் பூட்டி சுயநலம் கொண்டோம்
.  சுற்றிடு முலகினிலே
வெற்றென வாழ்ந்தோம் விடுதலை விட்டே
.  செத்திடக் கற்கின்றோம்'

********************

சோதியை தொழுவோம்

.
சக்தியென்று சித்தம் கொள்ளு ரத்தம் சுட்டுமுன்
சஞ்சலங்கள் போனதென்று புத்தி கூத்திடும்
பக்திஎன்று வாழும் போது பார்த்து வானெழும்
பார்வைகொள்ளா சோதி எண்ணிப் பக்குவம்பெறு
எக்கதிக்கும் ஆழ்ந்திடா தோர் துன்பமேயிலா
இப்பெருத்த பாரில்வாழ்வும் இன்னல்களற்ற
முக்தி வேண்டி கையெடுத்து மேலை வானிலே
மூண்டெழுந்த ஆதிசக்தி முன் பணிந்திடு

வெட்டி நீக்கு கேடு கொள் விரோதஎண்ணங்கள்
விட்டு நீங்குமச் சுகத்தை வேண்டிக் கேட்டிடு
தட்டிக் கைகள் போடு தாளம் சல்சல்லென்றிட
தாவி ஓடும் நீரின் துள்ளல் போல வாழ்வென
முட்டி ஓடவைக்கும் கெட்ட மூர்க்கம் கொள்ளெண்ணம்
மேன்மை வாழ்வில் நீக்கவும் மனம் களிப்புறும்
வட்டியோடு வந்தகாசு விட்டுச் சென்றிடும்
வந்தே அன்னை தந்தவாழ்வு மொட்டவிழ்ந்திடும்

சுட்டுச் சாம்பலாகும் மேனி தூய்மை கொள்ளவும்
சுந்தரப் பொன் வானின் வீச்சொளிக்குள் ஆகவும்
எட்டிப் பாயும் காட்டுவாழ்விலங்கின் கொள்மனம்
இன்றிப் பூ வதன் இதழ்கள் போல் விளங்கவும்
கட்டி மஞ்சள் பூசம் மேனி காமுகர்களால்
கட்டியாள நெஞ்சும்கூசிக் கண்டிருப்பதும்
தட்டிக்கேட்க விட்டிவைகள் நீயெழுந்திடு
தர்மம்காணத் தீரம் வேண்டித் தீயைக் கேட்டெழு

மட்டியோடு மாமடையன் மற்றும்தன்மதி
மட்டமான வன் மங்கை யர்மீது வன்மமும்
இட்டு வாழ்பவன் இரக்க சிந்தையற்றவன்
ஏற்ற வேடமிட்டு இந்த மண்ணில் வாழ்பவன்
சுட்டிநின் விரலைத் தூக்கி சொல்லியே இவர்
சூழ வாழும் தேசத்தோரின் சித்தம் நல்விதப்
பட்டு வாழ்வெனும் தமிழர் வீரம் கொண்டிடப்
பரந்த வானெழுந்த சோதி பக்கம் நின்றுகொள்
*****************

விழித்ததேன்

கண்களே ஏனோ விழித்தீர் - அதன்
. காரணம் ஏது சொல்வீரோ!
மண்ணிடைகாண் அவலங்கள் - அதை
. மாற்றவெனத் திறந்தாயோ
எண்ணப் புரவிகள் பூட்டி - இசைச்
. சந்தமெழும் ரதமோட்டி
விண்ணிற் பறந்திடும் மனமே - இன்று
. விட்டு விழிகொண்டதென்ன

கண்ணிமைக்கக் கருவாகும் - பலர்
. கண்டுகொள்ள ஒளிகூடும்
புண்ணியம் ஏதென அறியேன் - அதில்
. புன்னகை கொண்டுமே நின்றேன்
திண்ணமெது புரியாது - திட
. முண்டோ அதைக் கருதாது
கண்ணிமைத்தால் ஒருகாட்சி,- அங்கு
. கற்பனையில் ஒளிவெள்ளம்

எண்ணமே வாழ்வை இயக்கும் - அது
. எத்திசை என்றிலை ஓடும்
உண்மைகள் தூங்கிடும் இரவில் - அதில்
. உள்ளதென்ன எல்லை காணும்
கண்ணியம் மேவிடக் காத்தல் -` வழி
. காணும் விநோதங்க்ள் யாவும்
வெண்ணிலவை யொத்த தண்மை - கொண்டு
. வெல்லும் விழியொளி கூடும்

தன்னிலை விட்டுமே காணும் - விழி
. தானுறங்கும் நினைவென்றும்
கண்களை மூடுவ தில்லை - அவை
. காட்சி கொண்டே கனவாக்கும்
பெண்கள் இசைத்திட நடமும் - அவர்
. பேச்சிலெழுந்திடும் மனமும்
மண்ணில் இன்பம் பெறும் ஆயின் - இது
. மாபெரும் மேன்நிலை கொள்ளும்

இன்பமொன்றே எழுந்தாடும் - அதில்
. இல்லைத் துயரென்றும் ஆகும்
பன்நிறை மாவளம் கூடும் - உன்
. பங்கெனச் சொர்க்கமும் காணும்
இன்னும் பலப்பல சொன்னார் - இவன்
. இங்குணரும் வகையென்ன
தன்னிலையில் பலவீனம் - அச்சம்
.தாரும் குழப்பங்கள் மிச்சம்

பக்கம் வாராயோ !


துடிக்கின்றேன் துன்பத்தில் தூயவளென் றெண்ணித்
தொலை நின்றும் காணாதேனோ
வடிக்கின்றேன் கண்ணீரை வாயுவர்க்கக் கன்னத்தே
வழிகின்ற நீரோடையோ
படிக்கின்றேன் பாவநூல் பச்சையுடல்நொந்துமே
பரிதவிக்க விட்டும் நீரில்
செடிக்கன்றாய்  சீராகச் செய்வளங்கள் குன்றிடச்
சிதையவும்நீ சிரிப்பதோ

இடிக்கின்றேன் ஆலயத்தை என்மனதில் கொண்ட
இறைவாசல் கதவைப் பூட்டி
பிடிக்கின்ற துயரோடு பெருமிடர்ப் பேய்வந்தே
பிணக்கென்று எனைக் கொள்ளுங்கால்
வெடிக்கின்ற நட்சத்திர வீறோடு விண்பரந்து
விளைசக்தி உன்செயலின்றி
முடிகின்ற தோஉடலும் மோகவுணர் விச்சைதனை
முழுதென்றே உன்னைநாடி

கடிகின்றேன் கைவிரலைத் தோன்றும் வலிதுயர்தானும்
தோற்றுவதென் செயாலாலிதே
குடிக்கின்றேன் போதையுடன் கூந்தல்மலர் கொள்ளிவளென்
குலமகளின் உடல்ஊற்றையே
வடிக்கின்றேன் குருதி சுட்டே வழிகின்ற காயமதில்
வந்தவிதம் அறியாமலே
பிடிகின்றேன் பிடிவாதம் போகும்வழி பிழையென்று
பேதைமனம் பறை சாற்றவே

கடக்கின்றேன் காற்றுவழி கதிரோடு ககனத்தே
காணும்வெளி கன தூரமே
அடக்கின்றேன் இச்சைவழி அத்தனையும்மேனியதில்
அதிர்வெழும் நல்லின்பங்கள் தாம்
முடகின்ற மெய்காணும் மோகவுணர் வின்றாகி
முழுதாக பொறிகொள்ளவே
படக் கண்டும் துன்பமெலாம் பனிமலர்விட்டேகுமப்
பரிதியெனப் பக்கம் வீசாய்

சுடக் கண்டும் நிற்கின்றேன் சூரியனின் வெங்கதிரும்
சூழயிருள் மூடுங்காலை
இடக்கொன்று வருமாயின் இல்லையென்றாக்குமென்
இறையவளே என்னைக் காவாயோ
கிடக்கின்றதோ வழியும் கேள்தாயைக் கேட்டால்
கூனுமிந்த கேவலம் நீங்கி
விடக்கையைப் பொத்தென்று வீழாதெமைக் காவாய்
வேண்டும்நீ வந்தே காப்பாய்

*******************

விசித்திரம்

'விசித்திரம்

சித்திரா ரூபவி சித்திர மொன்றெனைச் 
.  சுற்றி யிழுக்குதய்யா - அது
வித்தையென்றே வந்து வேண்டுவ தென்னதை 
.  வேளை யறியேனப்பா 
புத்துணர்வுதரும் பொன்னளி வந்ததெந்தன் 
.  புத்தியில் சேருதய்யா - இது
சத்துவம் தந்தெனைப் பற்றியதா அது 
.  சாதகமானதுவா
  
மொத்தமெனக் கண்கள் காண்பன தூயநல் 
.  மின்னொளித் தோற்றங்களா - அவை
நித்திய தூக்கக் கனவுகளா முன்னே 
.  நிற்பது பொய்மைகளா
ரத்தினக் கல்லிடை வைத்த பொற்கிண்ணத்தில் 
   இட்டமது வொத்ததா - அவை
புத்தம்புதுச் சுவை கொள்ள மயக்கிடும் 
.  போதை மயக்கங்களா
    
வற்றியகுளத்தை வந்து மினுக்கிடும் 
.  விம்பமென் கானல்களா -அன்றி
எற்றும் அலைகொண்ட இயற்கை வழங்கிய 
. இன்பச்சுனை புனலா
தொற்றிய நோயின் சுவடுகளா இத்
.  தோற்றமும் மாயைகளா  - ஏதும்
அற்றுவாழ்வை இன்ன லாக்கிடும் எண்ணத்தின் 
.  ஆசையென் மாயைகளா

மற்றொரு சோலையில் மாமரக் கொப்பினில் 
.  மாலையில் பாடுங்குயில் - அது
அற்றொரு வேளையில் அண்டங் காகம் அயல்
.  கத்திடக் காணும்ஒலி
முற்றிய நெற்கதிர் மௌனத்திலே தலை 
.  மண்ணில் சரிந்திருக்க - எங்கும்
பற்றிய பச்சை நிறம் பரந்து எழில்
.  பாங்கினில் சோபைகொள்ள

உற்றவன் நானென ஓடிவருந் திங்கள்  
.  ஓங்குமலையொளிக்க - அதன்
பொற்தளிர் மென்னொளி பொல்லாதிருளோட்ட 
.  போதையை பாரெழுப்ப
சொற்குவை கொண்டனன் சுந்தரமாய்க்கவி 
.  சொல்ல ரசித்திருக்க
அற்புதமென்ன அறியாமையி லிவன் 
 ..ஆட மனம் மயங்க 

*******************************'



சித்திரா ரூபவி சித்திர மொன்றெனைச்
. சுற்றி யிழுக்குதய்யா - அது
வித்தையென்றே வந்து வேண்டுவ தென்னதை
. வேளை யறியேனப்பா
புத்துணர்வுதரும் பொன்னளி வந்தெந்தன் 
. புத்தியில் சேருதய்யா - இது
சத்துவம் தந்தெனைப் பற்றியதா அது
. சாதகமானதுவா

மொத்தமெனக் கண்கள் காண்பன தூயநல்
. மின்னொளித் தோற்றங்களா - அவை
நித்திய தூக்கக் கனவுகளா முன்னே
. நிற்பது பொய்மைகளா
ரத்தினக் கல்லிடை வைத்த பொற்கிண்ணத்தில்
இட்டமது வொத்ததா - அவை
புத்தம்புதுச் சுவை கொள்ள மயக்கிடும்
. போதை மயக்கங்களா

வற்றியகுளத்தை வந்து மினுக்கிடும்
. விம்பமென் கானல்களா -அன்றி
எற்றும் அலைகொண்ட இயற்கை வழங்கிய
. இன்பச்சுனை புனலா
தொற்றிய நோயின் சுவடுகளா இத்
. தோற்றமும் மாயைகளா - ஏதும்
அற்றுவாழ்வை இன்ன லாக்கிடும் எண்ணத்தின்
. ஆசையென் மாயைகளா

மற்றொரு சோலையில் மாமரக் கொப்பினில்
. மாலையில் பாடுங்குயில் - அது
அற்றொரு வேளையில் அண்டங் காகம் அயல்
. கத்திடக் காணும்ஒலி
முற்றிய நெற்கதிர் மௌனத்திலே தலை
. மண்ணில் சரிந்திருக்க - எங்கும்
பற்றிய பச்சை நிறம் பரந்து எழில்
. பாங்கினில் சோபைகொள்ள

உற்றவன் நானென ஓடிவருந் திங்கள்
. ஓங்குமலையொளிக்க - அதன்
பொற்தளிர் மென்னொளி பொல்லாதிருளோட்ட
. போதையை பாரெழுப்ப
சொற்குவை கொண்டனன் சுந்தரமாய்க்கவி
. சொல்ல ரசித்திருக்க -கொள்ளும்
அற்புதமென்ன அறியாமையி லிவன்
..ஆட மனம் மயங்க


*

******************************

கனவுகளோ நினைவுகளோ

'கனவுகளோ நினைவுகளோ

*******************************
கானம்பாடும் ஞானம்கொண்டு காணும்குயில் கீதமொன்று
காதினிலே கேட்பதுவும் கனவுகளாமோ
பானமென்று தேனுங்கொண்டு பாலிலிட்ட பழமின்துண்டு
பார்த்துப் பசி தீரக்கொள்ளப் பிரமையென்றாமோ
வானம்நின்று`கேட்பவர்க்கு வாரிஅளித்தாளும் சக்தி 
வாடிமனம் சோரவிடா வண்ண மிட்டாளோ
தேனழகுப் பொன்னிலவு தேவையின்றிக்,காட்டினிலே
தோற்றுமொளி வீச்செனவே தொலைவது நானோ

மானுமுண்டு சிங்கமுண்டு மாந்தரிலே பாம்புமுண்டு
மாயவலை போட்டு மனம் மயக்கியதாரோ
ஊனு முண்டு உள்ளிருந்து ஓடியெழும் உணர்வுக்கொண்டு
ஓங்குமிருள் ஊடொளியை தேடிடுவேனோ
மீனுங்கொண்டு மேலெழும்நீர் மேவுமலை ஆழியிலே
மெல்லக் கரைவிட்ட கயல் துடிப்பது போலே
நானுமுண்டு வாழவென்று நானிலத்தில் கேட்டழவும்
நாலும் புரியாதநிலை நிறுத்துவதேனோ 

சேனைகொண்டு  அரசபடை செல்லும்வழி காவல்கொள்ளா
சீரழிகும் செய்கை அறம் சேர்ந்திடப்போமோ
பானை மொண்டு நீர்சுமந்தே பாதிவழி பார்த்துவந்தும்
பற்றியகை விட்டிடறிப் போட்டுடைப்பேனோ
ஆனையுடன் வேங்கை நரி அத்தனையும் கானகத்தில்
ஆகும் இவையாளும் மனம்  எடுத்திடலாமோ
பூனயும்தான் காணுமெலி போட்டலைத்துச் சீண்டிவிடும்
போலமனம் தூண்டும்வகை புலப்படலேனோ

தேவி உனைக் கைதொழுதேன் தீ ஒளிரும் தாய்மனமே
தேகம் மனம் கொள்ளுரமும் தந்திடு வாயே
மேவி  வரும் துன்பமெனை மீண்டும் மீண்டும் பற்றுவதால்
மேனி படும் இன்னல்களை நீக்கிடுவாயே
காவி மனத் துன்பங்களைக் காலமெலாம் கண்டுலைந்தேன்
காதல்கொண்ட வாழ்வினிமை கண்டிடுமாமோ
ஓவியமும் நீவரைந்தாய் உள்ளஉயிர் நீகொடுத்தாய்
ஓடிவருந் தென்றல் சுகம் உளமெடுக்காதோ'


*******************************
கானம்பாடும் ஞானம்கொண்டு காணும்குயில் கீதமொன்று
காதினிலே கேட்பதுவும் கனவுகளாமோ
பானமென்று தேனுங்கொண்டு பாலிலிட்ட பழமின்துண்டு
பார்த்துப் பசி தீரக்கொள்ளப் பிரமையென்றாமோ
வானம்நின்று`கேட்பவர்க்கு வாரிஅளித்தாளும் சக்தி
வாடிமனம் சோரவிடா வண்ண மிட்டாளோ
தேனழகுப் பொன்னிலவு தேவையின்றிக்,காட்டினிலே
தோற்றுமொளி வீச்செனவே தொலைவது நானோ

மானுமுண்டு சிங்கமுண்டு மாந்தரிலே பாம்புமுண்டு
மாயவலை போட்டு மனம் மயக்கியதாரோ
ஊனு முண்டு உள்ளிருந்து ஓடியெழும் உணர்வுக்கொண்டு
ஓங்குமிருள் ஊடொளியை தேடிடுவேனோ
மீனுங்கொண்டு மேலெழும்நீர் மேவுமலை ஆழியிலே
மெல்லக் கரைவிட்ட கயல் துடிப்பது போலே
நானுமுண்டு வாழவென்று நானிலத்தில் கேட்டழவும்
நாலும் புரியாதநிலை நிறுத்துவதேனோ

சேனைகொண்டு அரசபடை செல்லும்வழி காவல்கொள்ளா
சீரழிகும் செய்கை அறம் சேர்ந்திடப்போமோ
பானை மொண்டு நீர்சுமந்தே பாதிவழி பார்த்துவந்தும்
பற்றியகை விட்டிடறிப் போட்டுடைப்பேனோ
ஆனையுடன் வேங்கை நரி அத்தனையும் கானகத்தில்
ஆகும் இவையாளும் மனம் எடுத்திடலாமோ
பூனயும்தான் காணுமெலி போட்டலைத்துச் சீண்டிவிடும்
போலமனம் தூண்டும்வகை புலப்படலேனோ

தேவி உனைக் கைதொழுதேன் தீ ஒளிரும் தாய்மனமே
தேகம் மனம் கொள்ளுரமும் தந்திடு வாயே
மேவி வரும் துன்பமெனை மீண்டும் மீண்டும் பற்றுவதால்
மேனி படும் இன்னல்களை நீக்கிடுவாயே
காவி மனத் துன்பங்களைக் காலமெலாம் கண்டுலைந்தேன்
காதல்கொண்ட வாழ்வினிமை கண்டிடுமாமோ
ஓவியமும் நீவரைந்தாய் உள்ளஉயிர் நீகொடுத்தாய்
ஓடிவருந் தென்றல் சுகம் உளமெடுக்காதோ

மனம் ஒரு குரங்கு



எத்தனை ஆண்டுகள் பித்தனுடன் யானும்
இப்படி வாழ்ந்திடுவேன் - விழி
பொத்தியதாய் இவன் போகும் வழிகண்டு
பொல்லாத் துயரடைந்தேன்
சத்தியம் என்றொரு பத்தியம் உண்டென்று 
சற்று எடுத்துரைத்தேன் - இவன்
புத்துல கென்றொரு அர்த்தமில்லாவழிப்
போக்கினைக் கையெடுத்தான்

வைத்த காலில் முள்ளு தைக்கு தையோவென
எத்துணை சத்தமிட்டேன் - இவன்
சித்தியற்ற வழி நட்ட நடுக் காட்டில்
சென்றலைந்தே சிதைந்தான்
மெத்தப் படித்தவன் என்றொரு போதையை
முற்றும் தலைக்கெடுத்தே - இவன்
நித்தம் நெஞ்சமழ நீரும் விழிகொட்ட
நஞ்செனு மெண்ணமிட்டான்’

சித்தம்மறுகியோன் செய்கலைவண்ணத்தில்
சித்திரம் ஒன்றெழுதிப் - பின்னே
வைத்த எழிலுரு மீது குற்றுமிட்டு
வாழ்வழகைக் கெடுத்தான்
பத்துகுணங்களும் கொண்டவனாய் உடல்
பக்குவம் தான் கெடுத்தே - காணச்
சொத்தெனக் குப்பையும் சேர்த்து மகிழ்வொடு
மெத்தையென்றே கிடந்தான்

கொத்துமலர் கொண்டோர் சோலை பக்கமுண்டு
கூடிநடப்போ மென்றேன் - இவன்
சித்தம்பிளறியே சுந்தரப் பூங்காவைச்
சொத்தையென மறுத்தான்
புத்தம் புதுக் காலை புன்னகை கொள்ளெனப்
புத்தியெடுத் துரைத்தேன் - விட்டே
செத்தேயெரி சுடுகாட்டினைக் கண்டதும்
சென்றங்கு தூங்குகிறான்

வித்தையில்லை ஒரு முற்றும் வலிமைகொள்
விண்ணெழில் மேகத்தப்பால்
நித்தியமாய் ஒளி நிற்குதே எண்ணென்று
நற்செயல் நானுரைத்தேன்
அத்தனைதூர மிருந்தெமை ஆளுமச்
சக்தியை ஏன் மறந்தான் - சொல்ல
எத்தன் விழிமூடி நித்திரைபோலங்கு
ஏனோ பாசாங்கு செய்தான்

காதலா சே.. சே.. எனக்கொன்றும் தெரியாது!


**************
பசியென்றால் உணவுண்டு கொள்வர் - அதைப்
பலநூறு வகையாக்கிப் பார் என்று சொல்வர்
ருசியென்றா லிதுவென்றே மெச்சி - அதை
ரசியென்றே சுவைஆறு வகைசெய்து ஈவர்
பசிகொண்ட உணர்வொன்று கண்டால் - அதைப்
பலவந்தம் செய்தேனும் பதுக்கென்று கூறி
கசிகின்ற துயர் தன்னை தீரா - அவர்
கண்மீது நீர்பாயக் கதறென்று கொல்வர்

உயிர் கொல்லும் உணர்வொன்றும் உண்டு - அது
உன்மத்த மென்றாக்கத் தலை பித்தம் கொள்ளும்
வயிறிங்கே படும்பாடு கொஞ்சம் - இந்த
வலிமை கொள் நினவங்கே பெரும்பாடு செய்யும்
தயிருண்ணக் குடல் வேட்கை தணியும் - இத்
தவிப்புக்கு எது வேண்டும் தரும் பாதைவிட்டே
துயிலுக்கும் இயல்புக்கும் .துன்பம் - தந்தே
தொலையென்று மதிகெட்டே தெருவிலே தள்ளும்

வெயிலுக்குள் நின்றே பாருங்கள் - அதன்
வெப்பத்தில் துடிக்கின்ற சமுதாயம் ஓனறாம்
பயிலுங்கள் எனப் பாடத்தோடு - இங்கே
பத்தென்ற வயதோடு பயிலென்று கூறி
செயலுக்குள் எதுவாக்கம் காமம் - இந்த
செய்முறை கொள்ளும் நின் தேகங்கள் என்றே0
புயலுக்கு பலியாகும் தன்மை - இன்றிப்
புரிந்துள்ள அறியாமை தொலைத் திடச் செய்ய

அயலுக்கு மேல்நாட்டில் இன்றோ - எங்கும்
அவர்கொள்ளும் கல்விக்குள் காதலும் 0பாடம்,
பயிலென்று தருமெண்ணம் பாரீர் - அது
பலம்கொள்ளும் அறிவென்ப உணர்வினைத்தள்ளி
உயிருக்கு பெரும் வாழ்வு நல்கும் - கொண்ட
உடல்செய்யும் வேட்கைக்கு ஒருபாதை கிட்டும்
பயிருக்கு நீரூற்ற வேண்டும் - இந்தப்
படும்பாட்டுக் கொரு தீர்வு பார்த்தன்பு ஊற்றும்

......................................................................................................................
இத்தோடு நிறுத்திக்கொள்கிறேனே!\
காதல் ஒழித்து மறைப்பதற்கல்ல. பேசுங்கள். தெளிவடையுங்கள்
...................................

என்றும் அருகில் நில்!



நீயிருந்தாய் என்னருகே நினைவெழுமென் கற்பனைகள்
நெஞ்சிலிசை கொண்டினிமையாகவே
தாயிருந்தால் காணும் சுகம் தந்தவள் நீ தந்ததனால்
தானுமெழில் கொண்டொரு சொல்லாகவே
போயிருந்தால் கோவில் சிலை போட்டுடைக்க மண்கலயம்
போகமென்னும் மாயைகொண்ட தேகமே
வாயிருந்தால் வாழ்ந்திடலாம் வாடி நின்றால் தேய்ந்திடவும்
வாழ்க்கைகொண்ட மாயநிலை மாறவே

சேயழுதால் தாயணைக்கும் சேர்ந்தகொடி மரமணைக்கும்
சீறிவரும் மாநதியுமோடியே
தூய கடல் சேர்ந்திணையும் தூக்கம்விழி கொண்டணையும்
துன்பம்வந்து வாழ்வணைக்க முன்னரே
தேயுங் குறைத் திங்களெனத் தோன்றிடாது வாழ்வுதனை
தீயவழி மீண்டு நலம்வாழவே
போயணைப்பாய் உள்ளமதில் பூத்த ஒளி பொலியுவண்ணப்
பேரொளியாம் ஞானசக்தி ரூபமே

கானகத்தில் காணும்மரம் காற்றடிக்க ஊதுமூங்கில்
காட்டருவி கொட்டுமோசை கூட்டியே
வானகத்தில் வெள்ளிசிரித் தாட மறை வெண்முகிலில்.
வீழ்ந்துறங்கிச் செல்லும் நிலா கூடவே
மீனகத்தில் கொண்ட திரை மேவிஎழுங் காற்றினொலி
மீறி எழும் ஆழியலை ஆக்கியே
தானகத்தில் எம்மையெண்ணித் தந்தவுடல் கெட்டுவிட
தாங்கிஎமை ஆட்கொள்ளுவாள் சோதியே

யானை தன் பலமறியா


காலையிலே பரிதிவட்டம் அடிவான்தோன்றக்
கலகலத்தே யாடும் மரக்கிளையின் இலைகள்
ஓலைஇழை தென்னை தருகிடுகால் வேய்ந்த
ஒர்குடிசை யோரத்தில் நின்றேன் யானும்
சோலைமலர்த் தென்றல் வரும் வாசங்கொண்டே
சுந்தரமாய் நாளொன்றின் செழித்தோர் காலை
மேலைவான் உச்சியினுக் கேறும் நாட்டம்
மெல்ல எழும் சூரியன்கொண் டெங்கும் தாவ

சேலையணி மாதொருத்தி சிறிதாம் குடிசை
சேர அயல் நின்றுவிழி சிந்தக் கண்டேன்
வாலையவள் பருவத்தின் வனப்பைக் கொண்டாள்
வாலிபனோ அவள் கணவன் வீம்பில் நின்று
சாலைதனில் போய்வருவோர் சாட்சிநிற்க
சேர்த்தொருகை சிறுதடியால் சீண்டக்கண்டேன்
நூலையிடை கொண்டவளோ நெஞ்சம் விம்மி
நிலையஞ்சி தலைகுனியும் செயலும் கண்டேன்

ஆசைகளைச் சுமந்தின்பம் தேடும் வாழ்வில்
அகத்திடையே உருவாக்கும் வேட்கைதானும்
காசைப் பணம்பெரிதென்றே கண்டே நெஞ்சும்
காணதே அன்பென்ப கருத்தில் கொள்ளா
தேசையுடை திலக நுதல் தீட்டும் மங்கை
திருத்தலங்கள் தெய்வம் எனக் கண்டும் பின்னர்
மாசையுடை வாழ்விலந்தப் பெரிதாம் ஒளியை
மனமெண்ணி உருகிவரம் கேட்டல் வேண்டும்

தேசமெங்கள் தூயமண்ணில் தோற்கா பெண்கள்
தினமெடுத்த வாழ்வில் பெரும் திண்மைசக்தி
மோசமற முற்றும்துயர் மறைந்தே போக
முடிவினிலே வெற்றிதனைக் கொள்ளத்தானும்
வீச வருங்காற்றுக்கோர் வலிமை உண்டாம்
வெகுண்டெழவும் புயலாகும் வீரம் உண்டு
நாசமெலாம் அழிந்து பெரு நன்மைகூடும்
நாளுமவள் சக்தியினை வேண்டிக்கொண்டால்!

பெண்ணவளில் பெருஞ்சக்தி பிணைந்தே காணும்
பேதைகளோ தன்வலிமை தாமேயறியா
மண்ணிடையே மாகரியை ஓட்டும் பாகன்
மனதெண்ணி வலிமைகொண்டான் என்றேயஞ்சி
புண்-படவே அங்குசத்தால் குத்தும்போது
பிளிறி யதன் வேதனையைதாங்கும் யானை
கண்படவே பெண்டிர் தமை கடையில் வைத்துக்
கச்சிதமாய் தன்வலிமை கொண்டே காண்பர்

வெண்ணெய் என உருகியவள் துன்பம் நீக்கு
வேண்டும் பலம் என்றெண்ண வந்தே சேரும்
வண்டளையும் மென்மலரின் வண்ணங் கொண்டே
வலிகுன்றி உள்ளோமென் றன்னையர் எண்ணா
உண்டுசெயும் மனித வர்க்க உரிமை கொண்டாள்
ஒளியவளைச் சக்தியினை வேண்டிக்கொண்டால்
பண்டுபல காலமெலாம் பணிந்தே வாழ்ந்த
பாடு ஒழிந் தாற்றலுடை பெண்மை தோன்றும்

சக்தி தருவாள்!



சக்தி என்று சொல்லுவோம் சரித்திரத்தை வெல்லுவோம்
பக்தி கொண்டும் ஆடியே பரத்தி லின்பங் காணுவோம்
எக்கதிக் கென் றாளினும் இயற்கை தந்த தாயவள்
சக்கரம் கைச் சுற்றுவாள் சந்ததிக்கென் றாகுவோம்

செக்கிழுத்த மாடெனச் சுழன்றுலாவி வாழ்விலே
சக்கையாகிப் போய்விடாச் சக்திபெற்று வாழுவோம்
சுக்குநூ றுடைந்திடும் சுந்தரப் பொன்வெள்ளிகள்
எக்கனல் பொறித்தழல் ஏகுமந்த வான்வெளி

பக்குவத்தைக் காத்துமே பனிக்குளிர்ந்த சூழலில்
உக்கிரத்தை கொண்டொளி ஒளிர்ந்திடும் வெம்சக்தியை
விக்கினத்தைப் போக்கிடு விரைந்து வா தமிழ்ப்படும்
துக்கமும் துயர்கொள்ளும் துடிப்பினை நிறுத்தியே

மக்களாம் பழங்குடி மாந்தர் கெட் டழிந்திடா
செக்கச்செந் நிறம்பெறச் சிந்தை யேங்கி வெந்திடா
வக்கணைச் சொல் பேசியே வந்த நச்சுப் பாம்புகள்
எக்களித்துக் கொத்தியே இடர்படுத்தும் பூமியில்

நக்கவும் இனித்திடும் நல்லதேன் சுவைப்பென
மிக்க அன்பு பொங்கிட மேன்மை கொள்ளும் வாழ்வு தா
தொக்கி வான் சுழல்புவி சுதந்திரத்தில் வாழ்ந்திடச்
சிக்கல் தீர்த்துச் சக்தியே, செய்நலமென் றாடுவோம்

எப்போது வேண்டும் எது

......................................
1.
பேசா மௌனம் கொள் - உன் 
பெரிதாம் வாழ்வை இறை நோக்கும்
பேசா மௌனம் கொள் - உன்
பின்னால் ஞானத்தொளி தோன்றும்
‘பேசா மௌனம் கொள் - உன்
பிறழ்வும் முரண்வும் பலியாகும்
பேசா மௌனம் கொள் - உனைப்
புகழும் பெருமை தேடிவரும்

பேசா மௌனம் கொள் - உன்
புலமை ஆற்றல் பரந்துவிடும்
பேசா மௌனம் கொள் - உன்
பிழைகள் புரிந்தே வழிகாண்பாய்
பேசா மௌனம் கொள் - அந்தப்
பெரிதாமொளியும் உனில்சேரும்
பேசா மௌனம் கொள் - உன்
பிறவி பயனென் றறிவாய் காண்

2.
வேண்டும்போதே சொல் - விட்டால்
வினைகள் முற்றிக் கலியோங்கும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விலகும்நேர்மைவிதி சாடும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விட்டேமதியும் உறங்கும் காண்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விவரம் அறியாப் பகைகூடும்

வேண்டும்போதே சொல் - விட்டால்
வீணாய் பழிகள் உனதாகும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
வீழ்ச்சிக் கேதாய் மதிசோரும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விளைவோ நடைகொள் பிணமாவாய்
வேண்டும்போதே சொல் - விட்டால்
‘வீடும் தள்ளக் காடேற்கும்

3.
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சில் உதயத்தொளி் காணும்
பேசிக்கொண்டெழுவாய் - உனைப்
பார்த்தே யுலகம் துயில் நீங்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
மூச்சில் உணர்வே மொழிகூறும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சும் மேலாம் சபையேறும்

பேசிக்கொண் டெழுவாய்- உன்
பேச்சின் உண்மை வலுசேர்க்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சின தீரம் பகை வெல்லும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சின் உண்மை அணிசேர்க்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
வார்த்தை சுதந்திரப் பரிசீயும்

********************************
சாரம் :
(பேசாதிரு ஆனால் தேவைப்படும்போது பேசாமல் இருக்காதே!)

Thursday 24 September 2015

நம்பிக்கை கொள் நலமாகும்

(வலைப்பதிவர் திருவிழா மற்றும் தமிழ் மினிலக்கிய கவிதைபோட்டி 2015 க்காக எழுதப்பட்டது)

விண்ணெழுந்த புள்ளினங்கள்  வானெழுந்து தேடும்
வீறெழுந்து மேனிசுட்ட வெய்யில் மீண்டும் தோன்றும்
மண்பிறந்த மென்மலர்கள்  மஞ்சள்செம்மை வண்ணம்
மாற்றமென் றிதழ் பிரிந்தும் மாலை யொன்றில் கூடும்
தண்ணலைகள் நிம்மதியைத் தேடியோடி மாளும்
தாங்கிடும் நீர் தாமரைக்குத் தந்தனத்தோம் போடும்
எண்ணவே இனிக்கு மாங் குயில் படித்தகீதம்
இத்தனை எழில்படைத்தாள் அன்னை சக்திதானும்

வெண்ணொளிக் கதிர்சிறந்து வானமேறக் காணும்
வீழ்ந்த  சின்னத் தூறலை விரும்பித் தோகை ஆடும்
விண்வளை விதானத்தோடு வில்லின் ஏழுவண்ணம்
விந்தை காண் உன்வாழ்வு மெந்தன் விம்பம்கொண்டதென்கும்
பெண் குழைந்து பேச நெஞ்சம் பூவில் வண்டென் றாகும்.
பேதை உள்ளம் போதைக் கள்ளை பார்வைமொண்டு வார்க்கும்
அண்மைகண்டு திண்மைகெட்டு ஆணின் நெஞ்சம்வேர்க்கும்
அச்சம் விட்டு பெண்மை கிட்ட ஆனந்த வாழ்வேங்கும்

கண்ணில்காணும் காட்சிகொண்ட காலம்செய்யும் மாயம்
காதலின் இயற்கையின்பக் காட்சியை யும் மாற்றும்
எண்ணம்மீது வேட்கைபற்றி இச்சை கொண்டு பாயும்
இல்லை யென்றபோது துன்பம் ஏணி வைத்தேஏறும்
தண்ணலைத் தடாகத் தூடு தாக்கும் கற்கள் வீழும்
தன்னைமீறி நீரெழுந்து தன்மை கெட்டேமூடும்
புண்ணெழுந்த தாக நெஞ்சம் புன்மை கொண்டுவாடும்
புத்துணர்வுகொள்ளச் சக்தி அன்னைவேண்டு ஆகும்


இது எனது சொந்தப்படைப்பாகும். இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது.இது  வேறு எந்த இடத்திலும் வெளியிடப்ப்டமாட்டாது என்ற உறுதிமொழிகளை வழங்குகிறே]ன் 
----   கிரிகாசன்.