நீயிருந்தாய் என்னருகே
. நினைவெழுதும் கற்பனைகள்
. நெஞ்சிலிசை கொண்டினிமைகாணவே
தாயிருந்தால் காணும் சுகம்
. தந்தவள் நீ தந்ததனால்
. தானுமெழில் கொண்டகவிகூறவே
போயிருந்தால் கோவில்சி.லை
. போட்டுடைக்க மண்கலயம்
. போகமென்னுமாயைகொண்ட தேகமே
வாயிருந்தால் வாழ்ந்திடலாம்
. வாடி நின்றால் தேய்ந்திடலாம்
. வாழ்க்கைகொண்ட இந்தநிலை கண்டுமே
சேயழுதால் தாயணைக்கும்
. சேர்ந்தகொடி மரமணைக்கும்
. சீறிவரும் மாநதியு,மோடியே
தூய கடல் சேர்ந்திணையும்
. தூக்கம்விழி கொண்டணையும்
. துன்பம்வந்து வாழ்வணைக்க முன்னரே
தேயுங் குறைத் திங்களெனத்
. தோன்றிடாது வாழ்வுதனை
. தீயவழி மீண்டு நலம்வாழவே
போயணைப்பாய் உள்ளமதில்
. பூத்த ஒளி பொலியும்வண்ண
. பேரொளியாம் ஞானசக்தி ரூபமே
கானகத்தில் காணும்மரம்
. காற்றடிக்க ஊதுமூங்கில்
. காட்டருவி வீழுமெழில் கூட்டியே
வானகத்தில் வெள்ளிசிரித்
. தாட அயல் வெண்முகிலில்.
. வீழ்ந்துறங்கிச் செல்லும் நிலா கூடவே
மீனகத்தில் கொண்ட திரை
. மேவிஎழுங் காற்றின்சத்தம்
. மீறி எழும் கடல்தனையும் ஆக்கியே
தானகத்தில் எம்மையெண்ணித்
. தந்தவுடல் கெட்டுமென்ன
. தகிக்கவைத்து ஆட்கொள்ளுவாள் எம்மையே
. நினைவெழுதும் கற்பனைகள்
. நெஞ்சிலிசை கொண்டினிமைகாணவே
தாயிருந்தால் காணும் சுகம்
. தந்தவள் நீ தந்ததனால்
. தானுமெழில் கொண்டகவிகூறவே
போயிருந்தால் கோவில்சி.லை
. போட்டுடைக்க மண்கலயம்
. போகமென்னுமாயைகொண்ட தேகமே
வாயிருந்தால் வாழ்ந்திடலாம்
. வாடி நின்றால் தேய்ந்திடலாம்
. வாழ்க்கைகொண்ட இந்தநிலை கண்டுமே
சேயழுதால் தாயணைக்கும்
. சேர்ந்தகொடி மரமணைக்கும்
. சீறிவரும் மாநதியு,மோடியே
தூய கடல் சேர்ந்திணையும்
. தூக்கம்விழி கொண்டணையும்
. துன்பம்வந்து வாழ்வணைக்க முன்னரே
தேயுங் குறைத் திங்களெனத்
. தோன்றிடாது வாழ்வுதனை
. தீயவழி மீண்டு நலம்வாழவே
போயணைப்பாய் உள்ளமதில்
. பூத்த ஒளி பொலியும்வண்ண
. பேரொளியாம் ஞானசக்தி ரூபமே
கானகத்தில் காணும்மரம்
. காற்றடிக்க ஊதுமூங்கில்
. காட்டருவி வீழுமெழில் கூட்டியே
வானகத்தில் வெள்ளிசிரித்
. தாட அயல் வெண்முகிலில்.
. வீழ்ந்துறங்கிச் செல்லும் நிலா கூடவே
மீனகத்தில் கொண்ட திரை
. மேவிஎழுங் காற்றின்சத்தம்
. மீறி எழும் கடல்தனையும் ஆக்கியே
தானகத்தில் எம்மையெண்ணித்
. தந்தவுடல் கெட்டுமென்ன
. தகிக்கவைத்து ஆட்கொள்ளுவாள் எம்மையே