Saturday 7 May 2016

உலகம் உறவா பகையா?


 
தேனெடுக்கும் வண்டினமோ தென்றல்வர ஓடிவிடும்
  தேன்மலரில் பாசம் கொள்ளாது
தானெடுக்கும் பாதையிலே துள்ளிவரும் தென்றல் மணம்
  தந்த மலர் தன்னைக் கொள்ளாது
மீனெடுப்பில் துள்ளுமிரு மெல்லிழையார் கண்ணசைவில்
  மோகமுண்டு பொய்த்திடும் வாழ்வு
ஊனெடுக்கும் இன்பமென்றே எண்ணிவிடின் மாறித்துன்பம்
 ஏற்றமுறும் இச்சக வாழ்வு

வீடிருக்கும் வாழவிதி வெற்றிடமென் றாக்கிப் புயல்
  வீசுமதில் விளைவு பொல்லாது
கூடிருக்கும் கூட்டிலுயிர் கொண்டிருக்கும் கூடியது
  குற்றமென்றோ குளுமை பெறாது
ஆடிநிற்கும் மேனியிலே ஆணவத்தின் சாயலெழ
   ஆனந்தமோ கூடிவராது
கேடிருக்கும் செல்லும்வழி கொள்ளதுயர் மேவியின்ப
  கோட்டினைக்கால் கொள்ளவிடாது

பேடிருக்கும் பாட்டிசைக்கும் பக்கமதன் துணையிருக்கும்
   பேதமை மை யல் கொளும்வாழ்வு
ஓடி ரத்தம் சூடெழவே உள்ளிருந்து பொங்கும்வகை
   ஊற்றெடுக்கும் உறங்கவிடாது
காடிருக்கும் காட்டின்வழி கடையிருக்கும் விதியமைத்த
  காட்சிவழி மாற்றமிராது
கோடித்தனம் கொண்டிருந்தும் கொள்கைநெறி நேர்நடந்தும்
  கூற்றுவன்முன் வெல்ல விடாது

மேடிருக்கும் தாழ்விருக்கும் மின்னல்இடி கொண்டிருக்கும்
  மேதினியில் எம்மரும் வாழ்வு
கோடிருக்கும் தாண்டிமனம்  கொண்டிருக்கும் ஆவலது
  கோண்லிடும் நேர் நிமிர் வாழ்வு
நாடிருக்கும் நாட்டிற் பல நல்லவரும் கெட்டவரும்
  நண்பரெனக் கண்டிடும்போது
கூடிநிற்கும் காவலதும் குன்றித்திரிந் தாழமெனக்
  கொள்ளும் முரண் குணமிருக்காது

மூடிநிற்கும் பச்சைமரக் கூடலிலே கள்ளொழுகும்
  மென்மலர்கள் பூத்திடும் பாரு
தேடியுறை கொள்ளவென நீநடந்தால் தேளுடனே
  தீண்டும் விஷப் பாம்பு விடாது
வாடிநிற்கும் உள்மனதில் வந்ததுயர் நீங்கிடவே
  வண்ணவிரி வா ன்வெளி யாளும்
கோடியொலிப் பேரதிர்வின் கூற்றினிலே நீகலக்கும்
   கொள்கைதனைக் கைதொழு வேண்டு!


*******************

No comments:

Post a Comment