Saturday 7 May 2016

Post title பாதைஒன்று பயணம் இரண்டு


 
காரிருள் பற்றிய கண்களிலே அந்தக் ’
  காட்சி தெரியவில்லை
நேரருள் தந்தவள் நெற்றியிலே சினம்  
   நேரும் நிலையுமில்லை
போரெனக் கீழே புரண்டெழு என்றதோர் 
   பேதமை தானுமில்லை
வாரவிழ் பூந்தளிர் போலும் மனதிலே 
   வந்ததென் தோன்றவில்லை

ஆயிரம் தந்தவள் ஆவியெனில் கொண்ட 
    அத்தனை எண்ணங்களில்
போயிருந்து செய்த போக்கினிலே என்ன 
   பூத்தது  அன்பின் வகை
வாயிருந்தும் சொல்ல வார்த்தையில்லை 
  வற்றிய தோ இலை யிலை
காயிருந்தும் கனிகொள்ள வில்லை 
   அந்தக் காரணம் சக்திநிலை

சேயெனவே நின்று காணுகிறேன் 
  எந்தத் தேசம் புதிய கலை 
தூயநிலை கொண்டு காணுகிறேன் எந்தன் 
  துன்பம் ஒழிந்த நிலை
தாயன்பு கொண்டதி னால் இதுவோ அட 
  சக்தியில் ஊற்று தனை
போயிருந்து காணப் பெற்றுவிட்டேன் எந்தன் 
   போக்கினில் சாந்தஎல்லை

மீதிகிடந்த வன் நோய்கள் கொண்ட தொல்லை 
  மாறியதாய் நிலைமை
ஏதிதில் என்மனம் கண்டது என்றுமே 
  இன்றுபோல் வந்ததில்லை
ஊதி வளரென்றே  உல்லாசத் தீயினை 
  ஓங்கிடச் செய்தவளை
யாது எனக் கண்டே வேண்டிட வந்தூற்றும் 
  மீண்டும் கவிதை மழை  

No comments:

Post a Comment